ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்காக 8ம் வகுப்பில் பரீட்சை!!

905

8ம் வகுப்பில் பரீட்சை

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்காக எட்டாம் வகுப்பில் புதிய பரீட்சை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடவத்த மஹாமாய வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார். இந்த புதிய பரீட்சையின் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டத்தின்படி 8ஆம் வகுப்பின் பின்னர் மாணவர்கள் தமக்கு உரிய பாடநெறிகளை தெரிவுசெய்து உயர் கல்வியை தொடரமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.