கனடாவில் பெண் ஒருவரை இரண்டு பொலிசார் கடமை தவறாது கைது செய்தமை குறித்து பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
கனடாவின் ஹேமில்டன் நகரில் பெண் ஒருவரை, இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகளவான நபர்களை ஈர்த்து வருகிறது.
இந்த வீடியோவில் குற்றவாளி பலமுறை அலறியும், அழுதும் கைது செய்வதை தடுக்க முயல்கிறார்.
இருப்பினும் கடமை தவறாத பொலிசார் குற்றவாளியை கைது செய்ததுடன், என்ன நடந்தது என்பதை மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.
இந்த வீடியோ மக்களின் பாராட்டை பெற்றுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது.





