மனைவியை கொலை செய்துவிட்டு மகளுக்கு போன் செய்த தந்தை : பொலிசாரிடம் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!

296

மனைவியை கொலை செய்துவிட்டு மகளுக்கு போன் செய்த தந்தை

தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்துவிட்டு, மகளுக்கு போன் செய்து தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கேத்துநாய்க்கம்பட்டியை சேர்ந்தவர் ரவி. இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார்.

ரவி கூலித் தொழில் செய்து வரும் நிலையில், காமாட்சிக்கும் ஊத்தங்கரையை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் மிகவும் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது. இது ரவிக்கு தெரிந்ததால், மனைவி காமாட்சியிடம் இது குறித்து பல முறை சண்டை போட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணிக்கு மகளான அய்யம்மாளை தொடர்பு கொண்ட இவர், காமாட்சியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மகள், தாய் இறந்த நிலையில் கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அய்யம்மாள் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னரே ரவி தனது மனைவி காமாட்சியை வெட்டி கொன்றதாக காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

அதன் பின் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், மனைவியின் நடத்தை சரியில்லாததால் வெட்டிப் படுகொலை செய்தேன் என கூறியுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.