கசந்த திருமண வாழ்க்கை : 12 வயது மகள் மீது பெட்ரோல் ஊற்றிய தந்தை : நடுங்க வைக்கும் சம்பவம்!!

319

நடுங்க வைக்கும் சம்பவம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்க 12 மகள் மீது தந்தை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தாயார் மற்றும் உறவினர்களின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினரால் கொலை முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கொச்சி நகரில் உள்ள திருக்காக்கரை பகுதியில் குடியிருந்து வருபவர் 43 வயதான அபுபக்கர். மதுவுக்கு அடிமையான இவர், மனைவியையும் பிள்ளைகளையும் தொடர்ந்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.

இதனால் குடும்பத்தில் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருந்துள்ளது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அபுபக்கரின் மனைவி தமது பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கடந்த வாரம் உறவினர் வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

இந்த நிலையில் புதனன்று இரவு அந்த குடியிருப்புக்கு சென்ற அபுபக்கர், 12 வயதான தமது மகளை கசேரை ஒன்றில் வலுக்கட்டாயமாக அமர்த்தி, தாம் கொண்டுவந்த பெட்ரோலை அந்த சிறுமி மீது ஊற்றியுள்ளார்.

பின்னர் தீ கொளுத்த முயன்ற அவரை மனைவியும் உறவினர்களும் சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனிடையே அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினரை கண்டதும் அபுபக்கர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

தொடர்ந்து அபுபக்கரின் மனைவியும் உறவினரும் சேர்ந்து பொலிசாரை அணுகி புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் அபுபக்கரை கைது செய்த பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.