நாடகமாடிய கணவன்
சென்னையில் திருமணம் முடிந்த 6 மாதத்தில் இளம்பெண் தூக்கில் தொங்கிய விவகாரத்தில் அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு விக்னேஷ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த சில நாட்களாகவே கனவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மாரியப்பன் மனைவியை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த விக்னேஷ்வரி நேற்று திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், விக்னேஷ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு எழுதி வைக்கப்பட்டிருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் விக்னேஷ்வரி கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரின் மாரியப்பனை காவல் நிலையம் அழைத்து சென்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர் பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பொலிஸார், விசாரணையை தீவிரப்படுத்தும் போது, விக்னேஷ்வரியின் கழுத்தை நெரித்து கொன்றதாகவும், அதற்கும் முன் ஒரு கடிதம் எழுதி வாங்கியதாகவும் கூறியுள்ளார்.