கொழும்பு காலி முகத்திடலில் மிதந்த சடலத்தினால் பரபரப்பு!!

767

சடலத்தினால் பரபரப்பு

கொழும்பு கடற்பரப்பில் மிதந்து வந்த சடலத்தினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. காலி முகத்திடல் கடற் உள்ள கடல் பிரதேசத்தில் சடலம் ஒன்று மிதந்துகொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மிதந்த சடலம் ஆண் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையினரால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட கடற்கரை விஜயத்தின் போது இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சடலம் கொழும்பு துறைமுக பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் கொழும்பு பொலிஸாரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.