வவுனியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்!!

972

eleவவுனியா வடக்கு பிரதேசத்தின் பல கிராமங்களிலும் யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

புளியங்குளம், பழையவாடி, ஊஞ்சல்கட்டி, மருதோடை, குளவிசுட்டான் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு யானைகளின் அட்டகாசம் காணப்படுவதாக இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஊருக்குள் வரும் யானைகள் குடிமனைகளுக்குள் புகுவது, தென்னை, வாழை உட்பட பல்வேறு பயன்தரு மரங்கைளயும் சேதப்படுத்துவது உள்ளிட்ட பல அசௌகரியங்களை மக்களுக்கு ஏற்படுத்துகின்றன.

இதேவேளை புளியங்குளம் பகுதியில் நேற்றைய தினம் (14) தனியார் வகுப்பொன்றுக்கு சென்று வீடுதிரும்பிய மாணவியொருவரை யானை துரத்தியுள்ளது.

பின்னர் பொது மக்களின் உதவியுடன் அந்த யானை துரத்தப்பட்டு மாணவி காப்பாற்றப்பட்டுள்ளார்.