ஐரோப்பாவில் உயிரிழந்த இலங்கையர் : 25 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் கொண்டு வந்த சடலம்!!

541

ஐரோப்பாவில் உயிரிழந்த இலங்கையர்

25 வருடங்களுக்கு முன்னர் இத்தாலியில் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அன்னாரின் சடலம் மக்களின் அஞ்சலிக்காக சாவகச்சேரியில் உள்ள அவரது இன்று வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைககளின் பின்னர் அவரது விருப்பத்திற்கமைய சடலம் சாவகச்சேரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த எம்.ஸ்ரிபன் ஜோகி என்பவரின் சடலமே 25 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் பணியாற்றிய ஸ்ரிபன் 1994ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி 49ஆவது வயதில் உயிரிழந்தார். அவர் தனது இறுதி ஆசையாக தான் உயிரிழந்த பின்னர் தனது சடலத்தை தனது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு கொண்டுச் சென்று அங்கு அடக்கம் செய்ய வேண்டும் என உறவினர்களிடம் தெரிவித்திருந்தார்.

அப்போதைய யுத்த சூழ்நிலை காரணமாக அவரது உடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதில் சிக்கில் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவரது சடலத்தை 25 வருடங்களுக்கு பாதுகாக்க நிறுவனம் ஒன்றிடம் உறவினர்கள் ஒப்படைத்தனர்.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சடலத்தை இலங்கை கொண்டுவர உறவினர்கள் முயற்சித்த போதும் 25 வருட கால ஒப்பந்தம் உள்ளமையால், மீள பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது 25 வருடங்கள் நிறைவடைந்தமையினால் அவரது சடலத்தை பெற்ற உறவினர்கள், அதனை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.