கோர விபத்தில் 7 பேர் படுகாயம்!!

599

7 பேர் படுகாயம்

இன்று காலை நெலுவ லெல்வல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 07 பேர் காயமடைந்து நெலுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

தேயிலை தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் சிற்றூந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சிற்றூந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். விபத்து குறித்து நெலுவ காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.