வவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா!!

832


விளையாட்டு விழா



சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு வவுனியா பண்டாரிக்குளம், உக்குளாங்குளம் மகளிர் அமைப்பு நடாத்திய 14ம் ஆண்டு வருடாந்த விளையாட்டு விழா இன்று (09.04.2019) மதியம் 2.45 மணியளவில் உக்குளாங்குளம் சீர்திருத்தம் விளையாட்டுக்கழக மைதானத்தில் மகளிர் அமைப்பின் தலைவி சிவகுமார் திவியா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.



விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர் ஆசியுரை, வரவேற்புரை இடம்பெற்றதுடன் விளையாட்டு விழா ஆரம்பமாகியது.




பணிஸ் சாப்பிடும் போட்டி, சாக்கோட்டம், தேங்காய் திருவுதல், கயிறு இழுத்தல், சங்கீதக் கதிரை, வினோத உடைப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றிருந்ததுடன் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.


இந் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி லிங்கநாதன், செ.மயூரன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, வவுனியா உதவி பிரதேச செயலாளர் ச.பிரியதர்சினி, நெடுங்கேனி உதவி பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா,

கிராம அலுவலகர் ந.ரேனுஷா, சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் ஜோ.ஜெயக்கெனடி, வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் பூ.சந்திரபத்மன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர், விருந்தினர்களாக அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.