மகனுக்கு புதிய ஆடை வாங்கிக் கொடுக்காததால் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

349

மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு

சென்னை ஆவடி பகுதியில் மம்தா என்ற பெண்மணி தனது மகனின் பிறந்தநாளுக்கு கணவர் ஆடை வாங்கிகொடுக்காத காரணத்தால் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலத்தை சேர்ந்த பானு பிரசாத் என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக ஆவடி பகுதியில் தனது மனைவி மம்தா மற்றும் 4 வயது மகனுடன் வசித்துவந்துள்ளார். பானிபூரி விற்கும் தொழில் செய்து வந்த இவரது மகன் ராஜூவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் புது ஆடை வாங்கி தருமாறு மம்தா கூறியுள்ளார்.

ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்பதால், தாமதமாக வாங்கி தருகிறேன் என கூறியுள்ள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பானுபிரசாத் பானிபூரி விற்பதற்காக வெளியில் சென்றுவிட்டார். பின்னர் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்த அவர் தனது மனைவி எடுத்துள்ள முடிவை பார்த்து கதறி அழுதுள்ளார்.
மனைவி மம்தாவும், அவரது மகன் ராஜ் இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விசாரணையில், பானு பிரசாத் வெளியே சென்ற பிறகு கணவர் மேல் உள்ள ஆத்திரத்தில் விரக்தி அடைந்து காய் நறுக்கும் கத்தியை எடுத்து மம்தா தனது மகன் ராஜூவின் கழுத்து, வாய், கை ஆகிய பகுதிகளில் அறுத்து விட்டு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.