குழந்தையை வேறொரு பெண்ணை பார்த்துக்கொள்ளுமாறு பொய் சொல்லிவிட்டு தலைமறைவான தாய்!!

311

தலைமறைவான தாய்

தமிழகத்தில் தனது குழந்தையை பெண்ணிடம் பொய் சொல்லி ஒப்படைத்துவிட்டு தலைமறைவான தாயை பொலிசார் தேடி வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்தவர் மகேஸ்வரி (65). இவர் கடந்த மாதம் 19ம் திகதி கண் அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

சிகிச்சை முடிந்து சில நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். அப்போது பக்கத்து படுக்கையில் இருந்த வேணி என்பவர், மகேஸ்வரி மற்றும் அவருடைய மகளுடன் பழகி வந்தார். சம்பவத்தன்று வேணி, தனது அப்பாவின் கண் அறுவை சிகிச்சைக்காக தஞ்சாவூர் செல்வதாகவும், அதுவரை தனது மகன் பிரகதீசை (5) பார்த்து கொள்ளுமாறும் மகேஸ்வரியின் மகளிடம் கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து அவர் தனக்கு தெரிந்த சிவா என்பவரின் மனைவி சாலேத் (22) என்பவரை அறிமுகம் செய்து வைத்து, குழந்தையை இவர் பார்த்துக்கொள்வார் என்று வேணியிடம் கூறியுள்ளார்.

பின்னர் வேணி தனது மகனை சாலேத்திடம் ஒப்படைத்துவிட்டு, நாளை வந்து குழந்தையை வாங்கிச் செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் ஒருவாரம் ஆகியும் வேணி குழந்தையை வாங்க வராததால் சந்தேகமடைந்த சாலேத் இதுபற்றி பொலிஸ் புகார் அளித்தார்.

விசாரணையில், குழந்தையை விட்டு சென்ற வேணிக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததும், அவரால் குழந்தையை வளர்க்க முடியாததால் சாலேத்திடம் விட்டுச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வேணியை பொலிசார் தேடி வருகிறார்கள்.