இலங்கையிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு வரப்பட்ட கெளதம புத்தரின் கேசம் பற்கள், எலும்புகளைக் கொண்ட தங்கப் பேழையொன்றை தேடி வருவதாக கம்போடிய பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மேற்படி மலைப் பிராந்திய புனித ஸ்தலமொன்றிலிருந்து களவாடப்பட்ட அநேக சிறிய திருவுருவ சிலைகள் கடந்த வாரம் உடோங் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும் புனித சின்னங்களைக்கொண்ட பேழையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என அந்நாட்டு பொலிஸ் பேச்சாளர் கிர்த் சந்தாரித் கூறினார்.
அந்தப் பேழை எங்கிருக்கிறது என்பது எமக்குத் தெரியவில்லை. நாம் அதனைத் தொடர்ந்து தேடி வருகிறோம் எனக் கூறிய சந்தாரித் மேற்படி திருட்டுடன் தொடர்புடைய 5 காவலர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த புனித சின்னங்கள் 1950களில் புத்தரின் 2500வது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் இலங்கையிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.
மேற்படி புனித சின்னங்கள் 2002 ம் ஆண்டில் மறைந்த மன்னர் நொரோடம் சிஹளோக்கால் கம்போடிய தலைநகரிலிருந்து உடோங் பிராந்தியத்திலுள்ள புனித ஸ்தலத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர்.