திருமணமான 5 மாதத்தில் இளம் மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!!

736

கணவனுக்கு நேர்ந்த கொடூரம்

தமிழகத்தில் கணவனை அடித்துக் கொன்றுவிட்டு விபத்து என்று நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (23). இவருக்கும், முனியம்மாள் (20) என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த மாதம் 26-ந் திகதி வெங்கடேசன் தனது மனைவி முனியம்மாளுடன் மாமியார் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் இரவு வெங்கடேசன் பைக்கில் முனியம்மாளை ஏற்றிக் கொண்டு ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் வெங்கடேசன் ஒன்னப்ப கவுண்டன அள்ளி மயானம் அருகில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த பொலிசார் இது குறித்து முனியம்மாளிடம் விசாரித்தனர். அப்போது முனியம்மாள் கூறும்போது வெங்கடேசன் விபத்து ஏற்பட்டதில் இறந்ததாக கூறினார். ஆனால் வெங்கடேசனின் தங்கை அருள்ஜோதி என்பவர் தனது அண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறிய நிலையில் பொலிசார் முனியம்மாளிடம் மீண்டும் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முனியம்மாள் திருமணத்துக்கு முன்பே விஜய் (22) என்பவரை காதலித்து வந்ததும் திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கிடையில் பழக்கம் நீடித்து வந்ததும் தெரிந்தது. சம்பவத்தன்று தனது கணவர் வெங்கடேசனுடன் தான் பைக்கில் வருவதாக விஜயிடம் முனியம்மாள் தகவல் தெரிவித்தார்.

பின்னர் பைக்கில் வந்த வெங்கடேசனை இருவரும் சேர்ந்து அடித்து கொன்றதும், அவர் விபத்தில் இறந்ததாக முனியம்மாள் நாடகம் ஆடியதும் தெரியவந்தது இதையடுத்து விஜய் மற்றும் முனியம்மாளை பொலிசார் கைது செய்துள்ளனர்.