வவுனியா பண்டாரிகுளத்தில் கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை!!

682

nisha

வவுனியா பண்டாரிகுளத்தில் மாணவிஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது..

குறித்த மாணவி கடந்த சனிக்கிழமை வவுனியா பண்டாரிகுளம் அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

இவ்வாறு இறந்தவர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் உயர் தர வர்த்தக துறையில் கல்வி கற்கும் சந்திரராஜா நிசாளினி என்ற 18 மாணவியாவார்.

மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர், அவர் நீரில் மூழ்கி தற்கொலை செய்தார் என தீர்ப்பளித்தார்.