வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு!!

498

ஆதிவிநாயகம் நூல் வெளியீடு

வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக சிறப்பு மலரான ஆதிவிநாயகம் நூல் நேற்றைய தினம் ஆதிவிநாயகர் ஆலய மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வு வவுனியா பிரதேச இந்து கோவில்கள் ஒன்றியத்தின் செயலாளர் சிவ.திருக்கேதீஸ்பரன் தலைமையில் நடைபெற்றது. செல்வி பி.நதிக்கா செல்வி பி.நிதிக்கா ஆகியோரின் இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஆசியுரையினை ஆலய பிரதம குரு சிவஶ்ரீ இரகுநாத.கமலேஸ்வரக்குருக்ககளும் வாழ்த்துரையினை வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் ஆலய பரிபாலன சபைத்தலைவர் க.சுமந்திரன் அவர்களும் நிகழ்த்த,

செட்டிகுள பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சண்முகநாதன் நூலை வெளியீட்டு வைத்தார். அதனைத்தொடர்ந்து நூல் அறிமுகவுரையினை தமிழருவி த.சிவகுமாரன் நிகழ்த்த ஏற்புரையினை மலராசிரியர் சிவ.கஜேந்திரகுமார் நிகழ்த்தினார்.