வவுனியா இராசேந்திரகுளத்தில் விசமிகள் அட்டகாசம் : வீதி சமிக்கைகள் உடைப்பு!!

429

விசமிகள் அட்டகாசம்

வவுனியா இராசேந்திரகுளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளில் காணப்பட்ட வீதிச் சமிக்கைகளை இனந்தெரியாத நபர்கள் சேதமாக்கியுள்ளனர்.

பாரதிபுரம் தொடக்கம் இராசேந்திரகுளம் வரையிலான பகுதியில் வீதிகளில் காணப்பட்ட பாதாசாரிகள் கடவை முன்னால், பஸ் தரிப்பிடம், முன்னால் வளைவு போன்ற பாதாதைகளை புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் சேதமாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இடத்தில் நின்று நேற்று முன்தினம் மற்றும் நேற்றையதினம் இரவு இளைஞர்கள் மதுபாவனையில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் மற்றும் கிராம சேவையாளருக்கு பொதுமக்கள் தெரியப்படுத்தியமையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இரு அதிகாரிகளும் விசாரணைகளை முன்னேடுத்து வருவதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் சேதமடைந்துள்ள வீதிச் சமிக்கைகளை மீள அவ்விடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.