பாரிஸில் தேவாலயம் தீப்பற்றி எரிந்த போது, வீதி வீதியாக மக்கள் கதறி அழுத சோகக் காட்சிகள்!!

749

மக்கள் கதறி அழுத சோகக் காட்சிகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிபத்திற்கு உள்ளாகிய ‘நோட்ரேடேம் கேதட்ரல் (Notre-Dame-de)’ தேவாலயம் பேரழிவைச் சந்தித்தபோது, வீதிகள்தோறும் பாரிஸ் மக்கள் அழுது புலம்பிய காட்சி உலகையே சோகத்தில் ஆழ்த்திவருகின்றது.

கிறிஸ்தவர்களின் புனிதவெள்ளிக்கு இன்னமும்3 நாட்கள் உள்ள நிலையில் இடம்பெற்ற இந்த தீவிபத்தால் மத யாத்திரிகர்கள் பெரும் வருத்தத்தில் மூழ்கியுள்ளனர்.

இன்று காலை ஆலயத்துக்கு அப்பால் உள்ள வீதிகளில் பக்தர்கள் முழந்தாழிட்டு பிரார்த்தனைகளை செய்துவருகின்ற காட்சிகளும் தற்பொழுது வெளியாகிவருகின்றன.