நடுரோட்டில் கண்ணீர் விட்டு அழுத கர்ப்பிணி பெண் : பிளேடால் வெட்டிய மாமியார்!!

434

இந்தியாவில் கர்ப்பிணி பெண் ஒருவரை அவரின் மாமியார் கொடுமைபடுத்தியிருக்கும் நிலையில், அந்த பெண் நடுத் தெருவில் கண்ணீர் விட்டு அழும் வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

ஆந்திராவின் வைசாக்கில் இருக்கும் பென்டுர்டி பகுதியில் கர்ப்பிண் பெண் ஒருவர் நடக்க கூட முடியாமலும், அவரை அருகில் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி கூறும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அந்த பெண் ஒரு நிறைமாத கர்ப்பிணி எனவும், அவரை கருகலைப்பு செய்யும் படி அவரின் மாமியார் மற்றும் கணவர் கொடுமை படுத்தி வந்ததாகவும், அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல், அவரை எட்டி உதைத்து, பிளேடால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அந்த பெண் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இது குறித்து தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அந்த பெண்ணின் மாமியார் மற்றும் கணவனை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.