அமுதவாணன்
பிரபல தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தி இப்போது சினிமாவில் ஜொலிக்கும் பலர் உள்ளார்கள்.
அப்படி காமெடி நிகழ்ச்சி, நடனம், இப்போது லொள்ளு சபா 2 என கலக்க இருப்பவர் அமுதவாணன். இப்புதிய நிகழ்ச்சி குறித்து பேட்டியளித்த அவர் இதுவரை யாருக்கும் தெரியாத விஷயத்தையும் கூறியுள்ளார்.
அதாவது இவர் தன்னுடைய உழைப்பில் வரும் பணத்தில் 4 அரசு பள்ளி குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ளாராம், அதோடு காரைக்காலில் ஒரு பையனை கலக்கப்போவது யாரு பாலாவும், நானும் சேர்ந்து பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். அவரின் இந்த நல்ல செயலை கேள்விப்பட்ட மக்கள் பாராட்டி வருகிறார்கள்.