இளம் நடிகைகள் வீதியில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சோகம்!!

548

இளம் நடிகைகள்

இளம் தெலுங்கு நடிகைகள் பார்கவி மற்றும் அனுஷா ரெட்டி ஆகிய இருவரும் கார் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

20 வயதான பார்கவி மற்றும் அனுஷா ஆகிய இருவரும் படப்பிடிப்பினை முடித்துக்கொண்டு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, Vikarabad மாவட்டத்தின் Chevella பேருந்து நிறுத்தத்தின் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது எதிரா வந்த லொறி கட்டுப்பாட்டை இழந்து மோத வந்ததால், காரை ஓட்டுநர் வேறு பக்கம் திருப்பியதில் மரத்தின் மீது மோதி அப்பளம் போல கார் நொறுங்கியுள்ளது.

இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இரண்டு நடிகைகளும் உயிரிழந்தனர். இந்த இரு நடிகைகளும் தெலுங்கில் பிரபல தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள்.