வவுனியாவில் ரெலோவின் உயர்மட்டக் கூட்டம்!!

363

இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் ரெலோவின் உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகின்றது.

ஆயுதக் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பாக நிலைப்பாடு, தமிழரசுக் கட்சியின் அண்மைக்கால செயற்பாடு, ரெலோவின் அடுத்தகட்ட நகர்வு, வரவிருக்கும் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக் கலந்துரையாடலில் பேசப்படுகின்றது.

குறித்த உயர்மட்ட கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் ஸ்ரீகாந்தா, பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இச் சந்திப்பு தொடர்பான செய்தி சேகரிப்புக்கு சென்ற ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.