வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில்!!

625

பொலிசார் பாதுகாப்புக் கடமையில்

நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவுக்கு அமைய இந்த ஊரடங்கு சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.