வவுனியாவில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை கண்டித்து கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பு!!

356

நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் வவுனியா மாவட்ட இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என அனைவரும் இணைந்து இன்று திங்கட்கிழமை மதியம் வவுனியா நகர் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு முன் கறுப்புக் கொடியேற்றி தமது அனுதாபங்களையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களுக்கு முன் கருப்புக்கொடிகளை பறக்கவிட்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.