வவுனியாவில் தொடர் குண்டு வெடிப்பில் மரணித்தவர்கள் நினைவாக ஆத்மசாந்திப் பிரார்த்தனை!!

704

ஆத்மசாந்திப் பிரார்த்தனை

தொடர் குண்டு வெடிப்பில் மரணித்த பொது மக்களின் ஆத்மசாந்தி வேண்டிய விசேட வழிபாடும் அஞ்சலி நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் தேவஸ்தானம் என்பன இணைந்து இந்த நிகழ்வை கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

மரணித்த உறவுகளுக்கு சாந்தி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றதுடன், நெய் விளக்கேற்றி மரணித்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தனர்.

வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தான பிரதம குரு நா. பிரபாகரக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆத்மசாந்தி மற்றும் அஞ்சலி நிகழ்வில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம்,

முன்னாள் வடமாகாண சபை உறுப்டபினர் செ.மயூரன், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினர், அந்தணர்கள், சமூக செயற்பாட்டளர்கள், மாவட்ட இந்து ஆலய ஒன்றியத்தினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆத்ம சாந்திப் பிரார்த்தைனயிலும், அஞ்சலி நிகழ்விலும் பங்கேற்றனர்.