பொலிசார் தீவிர சோதனை
வவுனியா வைத்தியசாலையில் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய வைத்தியசாலைக்கு வரும் அனைவரது பொதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
பாதுகாப்பு அமைச்சினால் இன்று வழங்கப்பட்ட தகவலுக்கமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வைத்திசாலைக்கு வரும் நோயாளர்கள் முதல் பார்வையியாளர்கள் வரை பொதிகள், ஆடைக்கு மேலாக அங்கிகள் ஏதெனும் அணிந்திருந்தால் அவற்றையும் சோதனை செய்து வைத்தியாசலைக்கு பொலிஸார் அனுமதித்து வருகின்றனர்.