வவுனியா பூந்தோட்டம் வர்த்தகர்களினால் குண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி!!

644

உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி

கொழும்பின் பல பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த மற்றும் உயிர்நீத்தவர்களுக்களுக்காக பிராத்தனையும் அஞ்சலி நிகழ்வும் வவுனியா பூந்தோட்டம் வர்த்தகர்களின் ஏற்பாட்டில் பூந்தோட்டம் சந்தியில் இன்று (23.04.2019) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

வர்த்தகர் லோரன்ஸ் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மெழுவர்த்தியேற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் அப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் கொண்டிருந்தனர்.