வவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!!

544

தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு..

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களை அடுத்து இலங்கையின் பலப்பகுதிகளில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்த வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (23.04.2019) காலை 8.30 மணியளவில் தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரச திணைக்களங்களின் உத்தியோகஸ்தர்கள் கலந்துக் கொண்டுடதுடன் அரசாங்க அதிபரினால் ஏற்றப்பட்ட தேசிய கொடி அரைக்கம்பத்தில் விடப்பட்டது.

அதன் பின்னர் உயிர்நீத்த மக்களுக்காகவும் காயமடைந்த மக்களுக்காகவும் இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.