வவுனியா பேரூந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினர்!!

392

பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினர்

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் கடும் பாதுகாப்பு பரிசோதனையின் பின் பயணிகள் உள்நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் வவுனியா பேரூந்து நிலையத்தில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து கடும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பேரூந்து நிலையத்திற்குள் உள்நுழையும் பேரூந்துகளிலிருந்து பயணிகள் இறக்கப்பட்டு கைகளில் தங்கள் பயணப் பொதிகளை எடுத்துச் செல்லூமாறு பணிக்கப்படுவதுடன், சந்தேகத்திற்கிடமானவர்களின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் பேரூந்து நிலையத்திற்குள் உள்நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.