வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற இளைஞனை விரட்டிப்பிடித்த பொலிஸார்!!

342

இளைஞனை விரட்டிப்பிடித்த பொலிஸார்

வவுனியா நகர் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவரை விரட்டிசென்று மடக்கிப் பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

இன்று (25.04) காலை10.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டத்தில் இருந்து வவுனியா நகர் பகுதி நோக்கி தலைக்கவசம் இன்றி சென்ற இளைஞனை போக்குவரத்து பொலிஸார் விரட்டி சென்று குடியிருப்பு பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளையும் குறித்த இளைஞனையும் அழைத்துச் சென்றுள்ளர்.

தலைக்கவசம் இல்லாது சென்றதன் காரணமாகவே குறித்த இளைஞன் துரத்தி செல்லப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.