வவுனியா நகரில் பொலிசார் கடும் சோதனை நடவடிக்கை : அச்சத்தில் மக்கள்!!

1190

கடும் சோதனை நடவடிக்கை..

வவுனியா நகரிலும் அதை சூழவுள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வீடுகளில் வவுனியா பொலிசார் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டில் தொடர் குண்டு வெடிப்புக்கள் நடைபெற்றுவரும் நிலையில் சந்தேகத்திற்கிடமானவர்கள், ஊருக்கு புதியவர்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான அல்லது மூடிக்கிடக்கும் வீடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு பொலிசாரால் வவுனியாவில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமானவர்களின் அடையாள அட்டைகள் பரிசோதனை செய்யப்பட்டு கிராம உத்தியோகத்தரினால் பதிவு செய்யப்படும் நடவடிக்கைகளும் ஒவ்வோரு கிராமசேவகர் பிரிவிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனது.