வவுனியாவில்  குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் வேண்டி பிராத்தனை!!

463

நாடு முழுவதும் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் வேண்டி விசேட ஆராதனை நிகழ்வு வவுனியாவில் நேற்று முன்தினம் மாலை (23.04) இடம்பெற்றது.

போதகர் பி.என.சேகர் தலமையில் நடைபெற்ற இப்பிராத்தனையில் வவுனியா மாவட்ட கிறிஸ்தவ சபைகளை சேர்ந்த தலைமை போதகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வானது வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள தூய ஆவியானவர் ஆலயத்தில் நடைபெற்றதுடன் இவ் ஆராதனை நிகழ்விற்கு பொலிசார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

ஆராதனை நிகழ்வில் உரையாற்றிய நாற்சதுர சுவிசேச சபையின் தலைமை போதகர, நாட்டில் கிறிஸ்தவர்களை குறிவைத்து மிலேச்சத்தனமான வெடிகுண்டு தாக்குதல் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் தர இயேசு கிறிஸ்துவை நோக்கி பிராத்திப்பதுடன், நாட்டு மக்கள் அமைதியாக இருந்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறும் கோரிக்கை விடுத்ததுடன்,

இப்பாதக செயலை செய்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கான தண்டனையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.