வவுனியா வளாகத்தில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!!

359

இலங்கையில் கடந்த (21.04) ஈஸ்ரர் தினத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் நேற்று (24.04) நடைபெற்றது.

வவுனியா வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் முதலாவது சுடரினை கல்லூரியின் முதல்வர் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.