வவுனியா தெற்கு பிரதேச சபையில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!!

448

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வவுனியா தெற்கு பிரதேச சபை முன்றலில் இன்று (25.04.2019) காலை 10 மணியளவில் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் தலமையில் நடைபெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில் முதலாவது சுடரினை தவிசாளர் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின்னர் தவிசாளரின் அஞ்சலி உரையும் இடம்பெற்றது.

வவுனியா தெற்கு பிரதேச சபையில் கறுப்புக்கொடி கட்டப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருவதுடன் பிரதேசசபை கொடி மற்றும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.