கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மற்றும் மட்டகளப்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்து பாதிக்கபட்ட அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வும் பிரார்த்தனையும் வவுனியா ஸ்ரீநகர் கிராம மக்களால் இன்று (26.04.2019) அனுஸ்டிக்கபட்டது.
ஸ்ரீ சனசமுக நிலைய வளாகத்தில் காலை குறித்த அஞ்சலி நிகழ்வு அனுஸ்டிக்கபட்டது. இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரு நிமிட மௌனஅஞ்சலி செலுத்தபட்டதுடன், மெழுகுவர்தி ஏற்றி, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், பிரதேசசபை உறுப்பினர் த.யோகராசா, ஆசிரியர்களான திருமதி ஸ்ரீரஞ்சன், சோ.சுபாஜினி, லயன்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் லி.சிவச்செல்வன், கிராம அபிவிருத்திச் சங்கத்தை சார்ந்த ஜிந்துசன், சார்லஸ், மற்றும் இளைஞர்கள்,பெண்கள், தாய்மார்கள் என பலர் கலந்துகொண்டனர்.





