வவுனியாவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் 14 பேர் கைது!!

595

வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் பூவரசன்குளம், நெளுக்குளம் பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 14 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும், ஹயஸ் ரக வான் ஓன்றினையும் தடுத்து வைத்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா நகரப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து சுற்றி வளைப்பு செய்து கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 11 பேரை கைது செய்ததுடன், சந்தேகத்தின் பேரில் ஹயஸ் ரக வான் ஓன்றினையும் கைப்பற்றி தடுத்து வைத்துள்ளனர்.