
நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து வவுனியா முழுவதும் 500க்கு மேற்பட்ட பொலிஸார் மற்றும் முப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச் சோதனை நடவடிக்கையில் போது நேற்று (26.04.2019) மாலை சந்தேகத்திக்கிடமான முறையில் அரபாநகர் பகுதியில் சுற்றித்திரிந்த முஸ்ஸிம் நபர் ஒருவரை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் அவரிடம் அடையாள அட்டை இருக்கவில்லை அதன் பின்னர் அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸார் சோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது அவரது வீட்டிலிருந்து இராணுவத்தினரின் தொப்பி மற்றும் ஆடை என்பவற்றினை பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த நபரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செக்கட்டிப்புலவு அரபாநபர் பகுதியினை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வவுனியா நெளுக்குளம் பொலிஸார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இராசேந்திரகுளம் பகுதியில் சந்தேகத்திடமான முறையில் திரிந்த நபரை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் அவரின் அடையாள அட்டை பதிவு நீர்கொழும்பு என காணப்பட்டதுடன் பொலிஸாரின் விசாரணைகளின் போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தமையினால் நீர்கொழும்பு பகுதியினை சேர்ந்த குறித்த முஸ்ஸிம் நபர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸர் தெரிவித்தனர்.




