வவுனியா பம்மைபடுவில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு சோதனைச்சாவடி : அச்சத்தில் மக்கள்!!

1041

 

வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் இராணுவத்தினரால் கடும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான சோதனை நடவடிக்கை மேற்கோள்ளபட்டு வருகின்றது. இதன் நிமித்தம் வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் இராணுவத்தினரால் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் செல்லும் பயணிகள் இறக்கி விடப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே வாகனங்களில் பயணம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர்.

பயணிகள் கொண்டு செல்லும் பொதிகள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கபட்டு வருவதுடன், மாலை 6 மணிக்கு பின்னர் பம்பைமடு ஊடாக ஈச்சங்குளம் செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்தும் தடைசெய்யபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.