வவுனியா பஜார் வீதி இரானுவத்தினர் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் : சோதனைகள் தீவிரம்!!

1267

வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தியிலிருந்து பஜார் வீதியூடாக பள்ளிவாயில் வரையிலான பகுதியில் இன்று (28.04.2019) காலை 9.30 மணி தொடக்கம் இராணுவத்தினரும் பொலிசாரும் கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதிகளில் வீதிகள் தடை செய்யப்பட்டு உள்செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் பலத்த சோதனை நடவடிக்கைகளுக்கு உள்படுத்தபட்டு வருகின்றனர்.

முச்சக்கரவண்டிகளின் ஆசனங்கள் , முன் பெட்டி அனைத்தும் சோதனைக்குட்படுத்தபடுவதுடன் கார் மற்றும் மோட்டார் சைக்கில்களின் பொதிகள் வைக்கும் பகுதியினை திறந்து பொலிஸார் சோதனைக்குட்படுத்துகின்றனர்.

இச் சோதனை நடவடிக்கையின் போது அடையாள அட்டையின்றி முச்சக்கரவண்டியில் பொருட்களை ஏற்றிச்சென்ற முச்சகரவண்டியின் சாரதியினை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியினை நேற்றையதினம் (27.04.2019) இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது 11 ஆண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன் பொலிஸ் விசாரணையின் பின் இருவர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.