வவுனியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புடன் பூஜை வழிபாடுகள்!!

824

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினசரி ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுவது வழமை. அந்த வகையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜை வழிபாட்டினையடுத்து வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் வழமையினை விட அதிக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் , வவுனியா புனித சூசையப்பர் தேவாலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்துடன் தேவாலயத்தினுள் உள்செல்லும் அனைவரும் பொலிசாரின் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

அத்துடன் ஆலயத்தினுள் செல்வதற்கு ஆலய நிர்வாகத்தினால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது

குறிப்பாக பாதுகாப்பு பணியில் பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் , இரானுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் பெரும்பாலான தேவாலயங்களில் வழிபாடுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்படத்தக்கது.