அஜித்தின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம வாலிபர்களால் பரபரப்பு!!

415

Ajithநடிகர் அஜித்தின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் வீடு, சென்னை திருவான்மியூர் சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் 2 மர்ம வாலிபர்கள் அவரின் வீட்டு முன்பக்க இரும்பு கதவை தட்டியுள்ளனர்.

வெளியே வந்த காவலாளியிடம் நாங்கள் அஜித்தை பார்க்கணும், அவரை பார்த்து பேச வந்தோம் என்று சத்தம் போட்டு கலாட்டா செய்துள்ளார்கள். இதற்கு அவர் பகலில் வாருங்கள் என்று பதில் அளித்துள்ளார். ஆனால் அந்த வாலிபர்கள் போதையில் இருந்ததால், சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி ரகளை செய்துள்ளனர்.

அந்த நேரம் பார்த்து வெளியில் சென்றிருந்த நடிகர் அஜித் காரில் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் ரகளை செய்த ஆசாமிகள் உற்சாகமாகிவிட்டனர். தல வந்துட்டார், தல வந்துட்டார், என்று சந்தோஷ கூச்சலிட்டபடியே அஜித்தின் காருக்கு பின்னால் வீட்டுக்குள் ஓடியுள்ளனர்.

காவலாளி அவர்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் அஜித் காரைவிட்டு இறங்கி வீட்டுக்குள் போய்விட்டார். இதற்கிடையில் இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து வந்த பொலிசார் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரையும், திருவான்மியூர் காவல்நிலையத்திற்கு பிடித்து சென்றனர்.

பிடிபட்ட வாலிபர்கள் தாங்கள் அஜித்தின் தீவிர ரசிகர்கள் என்றும் அவரை பார்ப்பதற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் பெயர் கண்ணன்(29), இன்னொருவர் பெயர் வெற்றி(31). இருவரும் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

போதையில் இருந்ததால் அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு திருவான்மியூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். அவர்கள் தப்பான நோக்கத்தில் அஜித் வீட்டிற்கு வரவில்லை என்று தெரிய வந்ததாலும் அவர்கள் மீது புகார் எதுவும் கொடுக்கப்படாததால் எச்சரித்து விடுவித்து விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.