ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகை சமந்தா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் குறித்து சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அதில் ஆம் ஆத்மி கட்சி பற்றி கருத்து தெரிவித்திருக்கும் சமந்தா, இது ஒரு இனிய தொடக்கம். அதோடு மட்டுமல்லாது மக்கள் மாற்றத்தை விரும்பி இருக்கிறார்கள் என்றும் டெல்லியில் இருந்து இந்த மாற்றம் ஆரம்பமாகியுள்ளது எனவும் தேர்தல் முடிவு பற்றி கூறியுள்ளார்.
இவரது கருத்தை வரவேற்று சமந்தாவின் காதலர் சித்தார்த்தும் பதில் கருத்து வெளியிட்டிருக்கிறார். சமந்தாவின் தில்லான கருத்தால் மற்ற நடிகர், நடிகைகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.