கட்டுநாயக்கவில் பாதுகாப்புக் கருதி முக அடையாள அமைப்புக்கருவிகள்!!

232

கட்டுநாயக்க விமானத்தளத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு Facial Recognition System (FRS) என்ற முக அடையாள அமைப்புக்கருவிகள் நிறுவப்படவுள்ளன.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்களை அடுத்து இந்த கருவிகளை , ஐக்கிய நாடுகளின் போதைவஸ்து மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் இதனை அன்பளிப்பாக வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

இது ஏனைய நாடுகளில் சுங்கப்பிரிவினருக்கு சிறப்பான பயன்பாட்டை தந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த கருவிகளை பொருத்துமாறு ஏற்கனவே இலங்கையிடம் கேட்டுக்கொண்டபோதும் அதற்கு உரிய பதில் வழங்கப்படவில்லை.

இந்தக்கருவிகள் மூலம் விமான நிலையத்தில் இருந்து தப்பிச்செல்ல முயலும் எவரையும் கண்டுபிடிக்கமுடியும்.

இந்த கருவிகளின் மூலம் போலிக்கடவுச்சீட்டுக்களை பயன்படுத்துவோரை இலகுவில் கண்டறியமுடியும்.

இந்தக்கருவிகளை பொருத்தும்போது அதனுடன் இணைந்து 10 உயர்தொழில்நுட்ப புகைப்படக்கருவிகள் உள்ளடங்கவுள்ளன.

இவை மென்பொருளுடன் இணைக்கப்பட்டு ஆள்அடையாளங்கள் தெளிவாக காட்டப்படுகின்றன.

ஏற்கனவே ஒரு மாதத்துக்கு முன்னர் பங்களாதேஸ் விமான நிலையத்தில் இந்த அமைப்பு பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-