வவுனியா ஓமந்தை பர்நாட்டங்கல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர் புளியங்குளம் கிராமத்தில் இன்று (28.04) மாலை 4 மணிக்கு புயல் தாக்கியதில் 15 வீடுகள் சேதமடைந்துள்ளது.
வவுனியாவில் இன்று மாலை கடும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இக் காற்றின் காரணமாக வாழை, பப்பாசி போன்ற பயன்தரும் மரங்கள் முறிந்து மற்றாக அழிந்து போயுள்ளன.
மழையுடன் கூடிய காற்றின் காரணமாக வீட்டின் கூரைகள் பிடிங்கி வீசப்பட்ட நிலையில் தொடர்ந்து வீடுகளில் வசிக்க முடியாத மக்கள் பனிக்கர் புளியங்குளம் அந்தோனியார் ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா தெற்கு பிரதேச சபையின் தலைவர் து.நடராஜசிங்கம் மற்றும் ஸ்ரீ ரெலோ வவுனியா மாவட்ட அமைப்பாளர் ப.கார்த்தீபன் ஆகியோர் நிலைமைகளை பார்வையிட்டதுடன் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உடனடியாக சமைத்த உணவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேதமடைந்த வீடுகளுக்கு தற்காலிகமாக தரப்பாள்கள் வழங்க வவுனியா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.





