வவுனியா குழுமாட்டுச் சந்தியில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

1215

 

வவுனியா குழுமாட்டுசந்தியில் இன்று (30.04.2019) காலை 9.15 மணியளவில் இரு தனியார் பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

வாரிக்குட்டியூர் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக குழுமாட்டுச்சந்தி பகுதியிலுள்ள பயணிகள் தரிப்பிடத்தில் தரித்து நின்ற சமயத்தில் சுந்தரபுரத்திலிருந்து வந்த தனியார் பேரூந்து தரித்து நின்ற பேரூந்தினை முந்திச்செல்ல முற்பட்டடது.

இதன் போது தரித்து நின்ற பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன் இரு பேரூந்துகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

சுந்தரபுரத்திலிருந்து – வவுனியா நோக்கி பயணிக்கும் குறித்த தனியார் பேருந்து தினசரி இவ்வாறே அதிவேகமாக பயணிப்பதாக பயணிகள் விசனம் தெரிவித்தனர்.