சென்னையில் புத்தாண்டில் நடனம் ஆட பிரியங்கா சோப்ராவுக்கு 6 கோடி சம்பளம்!!

633

Priyanka-Chopraபிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார். உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களில் நடிகைகளை நடனம் ஆட வைக்க இந்தியா முழுவதும் உள்ள பெரிய நட்சத்திர ஹோட்டல்களின் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதற்காக பெரும் தொகைகளை அள்ளி கொடுக்கிறார்கள். அன்றைய தினம் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு புத்தாண்டு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்க நடிகைகள் தயாராகி வருகிறார்கள்.

சென்னை நட்சத்திர ஓட்டலில் 31ம் திகதி இரவு நடக்கும் புத்தாண்டு நிகழ்ச்சியொன்றில் நடனம் ஆட பிரியங்கா சோப்ராவை அணுகினர். அவரும் சம்மதித்தார். அதற்கு சம்பளமாக கேட்ட தொகைதான் ஹோட்டல் காரர்களை அதிர்ச்சியடைய வைத்ததாம். வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே ஆட 6 கோடி கேட்டுள்ளார். அத்துடன் மேடையில் பாடமாட்டேன். ஓரிரு பாடல்களுக்கு நடனம் மட்டுமே ஆடுவேன் என்று நிபந்தனையும் விதித்தாராம்.

பிரியங்கா சோப்ராவை விளம்பரப்படுத்தி டிக்கெட் கட்டணம் மூலம் இந்த தொகையை வசூலித்து விடலாம் என்று முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்ய ஹோட்டல் நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாம்.