வவுனியா வர்த்தக நிலையம் ஒன்றில் ஒருவர் கைது!!

972

வவுனியா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யபட்டுள்ளார்.

நேற்றையதினம் மதியம் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற இராணுவத்தினர் குறித்தநபரை கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியா நீதி மன்றிற்கு அருகில் கடமையில் இருந்த இராணுவத்தினர் முச்சக்கரவண்டி ஒன்றை வழிமறித்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது முச்சக்கரவண்டியில் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடவுசீட்டு வைத்திருக்காத காரணத்தினால் வவுனியா பொலிஸ்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், கடவுச்சீட்டை காண்பித்துவிட்டு செல்லுமாறு பொலிசாரால் தெரிவிக்கப்பட்டிருந்தார்.

வவுனியா நகர்ப்பகுதியில் அண்மைய நாட்களாக இராணுவம் மற்றும் பொலிசார் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தாதவர்கள், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சரியான தகவல்களை வெளிப்படுத்தாதோரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்வதுடன், சிலர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யபட்டுவருவதுடன், சிலர் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.