வவுனியா குழுமாட்டுசந்தியில் இன்று (30.04.2019) மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரக்காரம்பளை வீதியிலிருந்து நெளுக்குளம் செல்வதற்கு பட்டாரக வாகனம் குழுமாட்டு சந்தியில் திரும்ப முற்பட்ட சமயத்தில் நெளுக்குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மீது பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த குழந்தையும் அதன் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாக தெரிவித்தமையினையடுத்து வழக்கு பதிவு செய்யவில்லை
இவ் விபத்து காரணமாக அவ்விடத்தில் சிறிது நேரம் பரப்பரப்பான சூழ்நிலை காணப்பட்டதுடன் மன்னார் வீதியூடான போக்குவரத்தும் சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது.





