இளைஞரால் சீரழிக்கப்பட்ட இளம்பெண் : இறுதியில் தற்கொலை செய்து கொண்ட சோகம்!!

417

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜோதி நகரில் உள்ள இளம் பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், அங்குள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு முகநூலின் மூலமாக பொள்ளச்சியை சார்ந்த பாலன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இவர்களின் அறிமுகத்திற்கு பின்னர் நட்பு வட்டாரத்தில் பழகி வந்த நிலையில், இவர்களுக்குள் இருந்த பழக்கமானது காதலாக மாறவே, இவர்கள் இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர். இந்த நேரத்தில், எத்தனை நாட்கள் தான் முகநூலில் காதலிப்பது என்ற பேச்சு துவங்கி இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கோயம்புத்தூருக்கு வந்தவுடன் அங்குள்ள விடுதியில் அறையெடுத்து திருமண ஆசையை கூறி பெண்ணை பலவந்தப்படுத்தி சீரழித்த நிலையில், இதனை காரணமாக வைத்து பல முறை நாசம் செய்து தனது வெறித்தனத்தை காட்டியுள்ளான்.

இந்த நிலையில், மாணவியை தனது தேவைக்கு நயவஞ்சக புத்தியால் உபயோகம் செய்து விட்டு திருமணத்திற்கு தேவையான சான்றிதழை என் கொண்டு வரவில்லை என்று கூறி பிரச்சனை செய்து, கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு அழைத்து சென்று நடு ரோட்டில் நாதியற்று விட்டுவிட்டு சென்றுள்ளான்.

இதோ வருகிறேன் என்று கூறிய வார்த்தைகளை நம்பிவிட்டு சாலையின் வீதியில் செய்வதறியாது நின்ற பெண், சில நேரம் கழித்து தாம் ஏமாற்றப்பட்டு இருக்கும் நிலையினை அறிந்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரிடம் விஷயத்தை கேட்டறிந்த காவல் துறையினர் பொள்ளாச்சியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பொள்ளாச்சியில் வந்து புகார் அளித்த பெண்ணிடம் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு சென்று புகார் அளிக்க கூறி திரும்பி அனுப்பியுள்ளனர். இவ்வாறாக சுமார் இரண்டு மாதங்கள் பொள்ளாச்சிக்கும் கிருஷ்ணகிரிக்கும் அலைந்து பார்த்த பெண், தனது வாழ்க்கை சீரழிந்ததற்கு காரணமான நபரின் மீது புகார் அளித்தாலும் புகாரை ஏற்க மறுக்கிறார்கள் என்று கூறி மன வருத்தத்தில் இருந்து வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

இவர் இறந்த பிறகு இந்த பிரச்சனை குறித்து தக்க விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாணவியின் உடல் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் உள்ளது. இந்த சம்பவமானது மீண்டும் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.