சமந்தாவின் துணிச்சல்!!

458

Samanthaட்விட்டரில் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சமந்தா. ஆம் ஆத்மி கட்சி குறித்தும் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் குறித்தும் பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த தருணத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக ட்விட்டரில் தன் கருத்தைத் துணிச்சலாகத் தெரிவித்துள்ளார் சமந்தா.

ஆம் ஆத்மி கட்சி ஒரு இனிய தொடக்கம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் டெல்லியில் இருந்து ஆரம்பாகி இருப்பது இன்னும் சிறப்பு என்று கூறி இருக்கிறார்.

இவரது கருத்தை வரவேற்று சமந்தாவின் காதலர் சித்தார்த்தும் பதில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்.

சமந்தாவின் தில்லான கருத்தால் மற்ற நடிகர், நடிகைகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.